/* */

தஞ்சாவூரில் தடுப்பூசி மீண்டும் தட்டுப்பாடு, 100 டோக்கன் மட்டுமே விநியோகம், பொதுமக்கள் ஏமாற்றம்

தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 100 டோக்கனை வாங்க அதிகளவில் பொதுமக்கள் வந்ததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் தடுப்பூசி மீண்டும் தட்டுப்பாடு,   100   டோக்கன் மட்டுமே விநியோகம்,  பொதுமக்கள் ஏமாற்றம்
X

தஞ்சாவூர் அண்ணா அரங்கு தடுப்பூசி  மையத்தில் தலா 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டதால், இதனை அறியாமல் வெயிலில் நீண்ட நேரம் நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 117 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.

300 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு 4 மணி நேரத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று டோக்கன் வாங்குவதற்கு காலை முதல் பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் குவிந்தனர்.

அண்ணா அரங்கு மையத்தில் தலா 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டதால், இதனை அறியாமல் வெயிலில் நீண்ட நேரம் நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் ஒருவருக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் வழங்கப்பட்டதால் அதிகாரிகளுடனும் காவல்துறையுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் 9 மணி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பிற்பகல் 11 மணிக்கு மேல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாளைக்கு 100 டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் பேருக்காவது டோக்கன் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 4 Jun 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...