Begin typing your search above and press return to search.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று வட்டாச்சியரிடம் மனு
இலவச குடிமனை பட்டா வழங்க கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு.
HIGHLIGHTS
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீடற்ற அனைவருக்கும் இலவச குடி மனைப்பட்டா வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். கோவில் - அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்கி தடையில்லா மின் இணைப்பு வழங்க வேண்டும் .100 நாள் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி தினச் சம்பளம் ரூபாய் 600 வழங்கிட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதியாக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்திட கோரியும் பூதலூர் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் இந்திய கம்யூனிஸ்ட் மனு கட்சியினர் பேரணியாக சென்று மனு அளித்தனர்..