ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட தஞ்சை வணிகர் தின கூட்டத்தில் தீர்மானம்
ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட தஞ்சை வணிகர் தின கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
மே 5 ம் தேதியை வணிகர்கள் வணிகர் தினமாக கொண்டாடி வரும் நிலையில், தஞ்சையில் நடைபெற்ற வணிகர் தின மாவட்ட கூட்டத்தில் மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், வணிகர்களும் பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தஞ்சை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி கூறுகையில், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. வரியை அடிக்கடி உயர்த்துவதால் வணிகர்கள் பாதிக்கப்படுவதால் ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட வேண்டும் என்றும், தமிழக அரசு மே மாதம் 5 ம் தேதி வணிகர் தினமாக அறிவித்து அரசு விடுமுறை அறிவித்திட வேண்டும் என்றும், அமேசான் உள்ளிட்ட மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே போகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.