/* */

கொள்ளிடம் புதிய குடிநீர் திட்டம் மூலம் 30ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் வராது

.பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம்

HIGHLIGHTS

கொள்ளிடம்  புதிய குடிநீர் திட்டம் மூலம்   30ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் வராது
X

தஞ்சை மாநகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் 12 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்தார் மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார்

கொள்ளிடம் ஆற்றில் 2 -வது, 3 -வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் தஞ்சை மாநகராட்சியின் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது என மேயர் சண். ராமநாதன் உறுதி அளித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் 12 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர் மேயர் ராமநாதன் மேலும் கூறியதாவது: தினமும் 2 வார்டுகள் வீதம் நேரடியாக சென்று பொதுமக்களிடம் அவர்கள் தேவை கேட்டு அதற்கான நிதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாநகராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிக மோசமாக உள்ளது. அதற்கான நிதி பெற்று சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும். கடந்த 5 ஆண்டுகளாக தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் முறையாக செயல்படாமல் உள்ளது கட்டிடங்கள் அனைத்தும் பயன்படுத்தாமல் பழுதடைந்துள்ளது.

இதற்கு பதிலாக புதிய மீன் மார்க்கெட் கட்டித்தரப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். இதன் மூலம் தங்கள் குறைகளை வீட்டில் இருந்தபடியே மக்கள் தெரிவிக்க முடியும். தஞ்சை மாநகராட்சியில் வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை வராத வகையில் கொள்ளிடத்தில் இருந்து இரண்டாவது மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக உறுப்பினர் சொந்த செலவில் குடிநீர் வழங்குவது தேவையில்லாதது தங்களிடம் தெரிவித்தால் குடிநீர் லாரிகள் அனுப்பி வைக்கப்படும் என்றார் மேயர் கண. ராமநாதன்.

Updated On: 11 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்