/* */

தஞ்சை மாநகராட்சி சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்

தஞ்சை மாநகராட்சி சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சி சார்பில்  சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்
X

தஞ்சாவூரில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் தேரோடும் வீதிகளான தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழ ராஜவீதி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் போடும் பணி நடந்து வருகிறது.

இதில் கீழராஜ வீதியில் மட்டும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மற்ற 3 வீதிகளிலும் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக புதிய தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் பெரும்பாலும் இரவு நேரங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே போடப்பட்ட பழைய சாலைகள் பெயர்த்து புதிய தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.

மேலும் கழிவுநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு உள்ளது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். வரும் 13-ந் தேதி பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடப்பதால் இன்னும் நான்கு நாட்களுக்குள் சாலை பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Updated On: 3 April 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது