தஞ்சாவூர் பெரியகோயிலில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைவசதிகள்: தஞ்சை எம்பி ஆய்வு
சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையானஅடிப்படைவசதிகள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கவேண்டும் என்றார் எம்பி
HIGHLIGHTS
தஞ்சாவூர் பெரியகோவிலுக்குவரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களுக்குதேவையானஅடிப்படைவசதிகள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கவேண்டும் எனஅனைத்துதுறைஅலுவலர்களுக்கு தஞ்சாவூர் நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் சுற்றுலாபயணிகளைகவரும் வகையில் மேற்கொள்ளவேண்டியஅடிப்படைவசதிகள் குறித்துமாண்புமிகுதஞ்சாவூர் நாடாளுமன்றஉறுப்பினர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ,மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தஞ்சாவூர் நாடாளுமன்றஉறுப்பினர் ஆய்வுசெய்த பின்னர் கூறியதாவது: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலுக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேர்ந்த சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிகின்றனர். இங்கு அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிவறைகள், சிற்றுண்டிகள்,வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு எந்தவகையிலும் எந்த பாதிப்பும் நடக்காத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பெரியகோவிலை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் தூய்மையாக இருக்கவேண்டும். பெரியகோவில் உள்ளேயும், வெளியேயும் தடுப்பு அரண் அமைத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்தார்.
இந்தஆய்வின் போதுதொல்லியல் துறைபராமரிப்புஉதவி இயக்குனர் சங்கர்,மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இந்துசமய அறநிலைத்துறை அலுவலர்கள்,காவல் துறைஅதிகாரிகள் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.