/* */

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர் : ஓய்வூதியம் பெற்றவர்கள் பாராட்டு

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி தற்போது பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர் : ஓய்வூதியம் பெற்றவர்கள் பாராட்டு
X

 முதலமைச்சர் .ஸ்டாலின் கடந்த (31.10.2022) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.

பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர் களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்கள். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: பத்திரிகையாளர் களின் நலனில் அதிக அக்கறை கொண்டதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணிக் காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதிஉதவியை 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது. பத்திரிகை யாளர் நல நிதியத்திற்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டு இத்தொகையின் மூலம் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையி லிருந்து பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் 5782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 2 கோடியே 89 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கியது, கொரோனா நோய்த் தொற்றால் இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, 20 பத்திரிகையாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கியது.

பத்திரிகைத் துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கீடு, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகையை 2 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை பத்திரிகையாளர்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது.

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 இலட்சம் ரூபாயிலிருந்து 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்கள். அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர். தமிழ்செல்வம், லெ.ராஜ் (எ) ரங்கராஜ் என்கிற 2 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார்கள்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.தமிழ்செல்வம் கூறியது:



நான் பல ஆண்டு காலமாக மாலைச்சுடர் தினசரி நாளிதழில் மாவட்ட செய்தியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். மகத்தான பத்திரிகையாளர் ஓய்வூதியம் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூபாய் 10,000 ஓய்வூதியம் பெற்று வருகின்றேன். இந்த உதவித் தொகையானது எனது குடும்ப அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் குடும்பத்தின் முக்கிய செலவுகளில் இந்த உதவித்தொகையானது பெரும் பங்களிப்பு வகிக்கிறது. இந்த சிறப்புமிக்க ஓய்வூதிய திட்டத்தை வழங்கிய தமிழக முதலமைச்சர் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லெ.ராஜ் (எ) ரங்கராஜ் தெரிவித்ததாவது :



நான் மாலை முரசு மற்றும் ஜனநாயக காவலன் பத்திரிக்கையில் பல ஆண்டு காலமாக மாவட்ட நிருபராக வேலை பார்த்து உள்ளேன் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம் மாதம் மாதம் ரூபாய் 10,000 பெறுகின்றேன். இந்த உதவித்தொகையின் மூலம் எனது குடும்ப பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மகத்தான பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் திட்டத்தை வழங்கியதமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் என தஞ்சாவூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார்.


Updated On: 1 Dec 2022 9:56 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  5. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  6. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  7. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  8. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  9. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!