Begin typing your search above and press return to search.
நள்ளிரவில் கார்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பட்டுக்கோட்டையில், நள்ளிரவில் கார்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் உள்ள தனியார் ஸ்பிரே பெயிண்டிங் ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த கார்களுக்கும், வ.உ.சி நகர் 2வது தெருவில் உள்ள மாடி வீட்டு கதவுக்கும் மர்ம நபர்கள் அதிகாலையில் தீ வைத்துள்ளனர். இதனால் கார்கள் இரண்டு கார்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் வந்தனர். இதனால் அடுத்தடுத்த கார்கள் தீப்பிடிக்காமல் தப்பித்தன. இருப்பினும் 2 சான்ட்ரோ கார் மற்றும் மாடி வீட்டு கதவு முழுவதும் எரிந்து சாம்பலானது. பட்டுக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.