Begin typing your search above and press return to search.
தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய டிராக்டர் மீது பேருந்து மோதல்
தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த, டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. டிரைவர் உட்பட 14 பேர் காயம்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் அடுத்த வளம்பக்குடியில், தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டர் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தது. அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி சென்ற கொண்டிருந்த அரசு பேருந்து சாலையின் நடுவே தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துகுள்ளனாது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. அரசு பேருந்தின் ஓட்டுநர் மோகன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் காயம் அடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.