/* */

தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்

தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
X

தஞ்சையில் நடைபெற்ற தேசிய  பாரா சிட்டிங் வாலிபால் போட்டியை தொடக்கி வைத்த  அமைச்ச அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தஞ்சாவூர் மாவட்டம், பெரியார் மணியம்மை பல்கலை கழக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11வது சீனியர் அகில இந்தியசிட்டிங் பாரா வாலிபால் போட்டியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க இந்திய பாராவாலிபால் சங்கம், தமிழ்நாடுபாராவாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான 11 -ஆவது சீனியர் அகில இந்திய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள் பிப்-3 முதல் 5 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் நடைபெற்றறது.

இந்தபோட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா,தெலங்கானா,ஆந்திரா,உத்ராகாண்ட், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.இந்தப் போட்டியிலிருந்துவீரர்கள் இந்தியஅணிக்குதேர்வு செய்யப்பட்டு உலகஅளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார் அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி . வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் 60 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பிலான கடன் உதவிதொகைக்கான காசோலையினை வழங் கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநில தலைவர் ஈரோடு மக்கள் ஜி. ராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டலமேலாளர் சங்கீதா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் மாவட்ட தடகளசங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்க தலைவர் இராமநாதன் துளசிஅய்யா வாண்டையார்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், மாவட்டஊராட்சிதலைவஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர். எம். சுந்தர்,பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் அன்புராஜ், PCI நிறுவன செயலர் எம். மகாதேவ்,

இந்திய பாராலிம்பிக் வாலிபால் அசோசியேசன் தலைவர் சந்திரசேகர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் ராஜா, பத்மஸ்ரீ கிரிஷ்சுக்பீர் சிங் , சந்திரசேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Feb 2023 6:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  3. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  4. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  5. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  7. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  8. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு