/* */

சாலை மறியல் போராட்டம்-அரசு ஊழியர்கள் கைது

சாலை மறியல் போராட்டம்-அரசு ஊழியர்கள் கைது
X

தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு 50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கோதண்டபாணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். முதலமைச்சர் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்களை அழைத்து பேசாமல் லெட்டர் பேடு சங்கங்களிடம் பேசிவி ட்டு ஒட்டு மொத்த சங்கத்திடமும் பேசியது போல் தோற்றத்தை ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது என்றனர்.

Updated On: 2 Feb 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?