/* */

நிதி நிறுவனம் நெருக்கடி: தற்கொலைக்கு முயன்ற பெண் பலி..!

கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனம் மிரட்டியதால், கடன் வாங்கிய இளைஞரின் தாய், மாடியில் இருந்து குதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

HIGHLIGHTS

நிதி நிறுவனம் நெருக்கடி: தற்கொலைக்கு முயன்ற பெண் பலி..!
X

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாட்டைச் சேர்ந்தவர் அய்யப்பன்; அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஓட்டல் விரிவாக்கத்துக்கு, 'ஈக்வட்டாஸ்' என்ற தனியார் நிதி நிறுவனத்தில், 2019ம் ஆண்டு, 25 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். மாத தவணையாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். கொரோனா முதல் அலை ஊரடங்கால், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்தனர். அதிராம்பட்டினம் போலீசில் அய்யப்பன் புகார் அளித்தார். போலீசார் தலையிட்டு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வசூலித்து கொள்ள தெரிவித்தனர். இதன்படி, அய்யப்பன் தவனையை கட்டி வந்து உள்ளார்.

தற்போது இரண்டாவது அலை ஊரடங்கால், மீண்டும் தொழில் முடங்கியது. கடன் தொகையை செலுத்த முடியவில்லை. நிதி நிறுவனத்தினர், அய்யப்பன் வீட்டுக்கு சென்று மிரட்டியும், அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, இதனால், மன உளைச்சலில் இருந்த அய்யப்பனின் தாய் தமிழரசி, 50, கடந்த 18ம் தேதி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Jun 2021 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்