/* */

கபிஸ்தலம் அருகே நடந்த கொலை: அரசு பஸ் டிரைவர் தஞ்சை கோர்ட்டில் சரண்

கபிஸ்தலம் அருகே நடைபெற்ற கொலையில் தலைமறைவாக இருந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் தஞ்சை கோர்ட்டில் சரணடைந்தார்.

HIGHLIGHTS

கபிஸ்தலம் அருகே நடந்த கொலை: அரசு பஸ் டிரைவர் தஞ்சை கோர்ட்டில் சரண்
X

ரமேஷ்

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள பட்டுக்குடி மெயின்ரோட்டில் வசிப்பவர் பிச்சைபிள்ளை (65). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், இரண்டு மகள்கள், உள்ளனர். இவர் பட்டுகுடி கிராமத்திலேயே சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

அதே பகுதி, மெயின் ரோட்டில் வசிக்கும் சகாதேவன் மகன் ரமேஷ் (42); இவர், தஞ்சாவூரிலுள்ள தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான முன்விரோதம் நீண்ட நாளாக இருந்து வந்தது.

கடந்த 20ந் தேதி மாலை பிச்சைபிள்ளையின் செங்கல் சூளைக்கு சென்ற டிரைவர் ரமேஷ் பிச்சை பிள்ளையிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிச்சைபிள்ளையை சரமாரியாக வெட்டி விட்டார். படுகாயமடைந்த பிச்சை பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ராஜ்கமல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு டிரைவர் ரமேஷ் என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், டிரைவர் ரமேஷ் தஞ்சை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Updated On: 22 April 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...