/* */

கன மழையினால் 3 குடிசை வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்து சேதம்

பாபநாசம் பகுதியில் பெய்த கன மழையினால் 3 குடிசை வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

கன மழையினால் 3 குடிசை வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்து சேதம்
X

மழையால் சேதமடைந்த வீடு

பாபநாசம் தாலுக்கா ராஜகிரி ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் மல்லிகா (44). இவரது மண் சுவர் கொண்ட கூரைவீடு சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஈரப்பதம் தாங்காமல் இடிந்து விழுந்து விட்டது.

இதேபோல் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் மட்டகாரர் தெருவில் வசித்து வருபவர் பார்வதி (50). இவரது கல் மண் சுவர் கொண்ட தகர சீட்டு கூரைவீடு சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டது.

இதேபோல் பாபநாசம் தாலுக்கா மட்டையாந்திடல் கிராமத்தில் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கண்ணம்மாள் (66).இவரது மண் சுவர் கொண்ட கூரைவீடு சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஈரப்பதம் தாங்காமல் மண் சுவர் இடிந்து விழுந்துவிட்டது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை வருவாய் ஆய்வாளர் மூலம் பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனனுக்கு அறிக்கையாக தகவல் தெரிவித்தனர்.

Updated On: 4 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!