Begin typing your search above and press return to search.
கட்சியினர் போட்ட வெடியால் தொழிலாளி வீடு தீ பற்றி எரிந்தது
திமுக வேட்பாளர் ஓட்டுக் கேட்க சென்றபோது, வரவேற்க வைத்த பட்டாசினால் ஏற்பட்ட தீ, அப்பாவி தொழிலாளி வீட்டை எரித்து சாம்பலாக்கியது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் பேட்டியிடும் திமுக வேட்பாளர் க.அன்பழகன் இன்று, குமரன்குடி கிராமத்தில் உதயசூரியன் சின்னத்திற்காக வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள கட்சியினர் அவரை வரவேற்கும் விதமாக வைத்த பட்டாசு வெடித்த தீ பொறியால் அருகில் இருந்த குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
வீட்டு உரிமையாளரான தேவி மகாலிங்கம், செங்கல் சூளையில் கல் அறுக்கும் பணியில் ஈடுபட சென்றிருந்த நிலையில் இவ்விபத்து நேரிட்டத்தால், வீட்டில் இருந்த பொருட்கள் எதையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. கும்பகோணத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்த தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில் மெத்தை, பீரோ, டிவி, குளிர்சாதனப்பெட்டி, 8 சவரன் தங்க நகைகள், ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது.