/* */

ராம நவமியை முன்னிட்டு திருத்தேரோட்டம்

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

ராம நவமியை முன்னிட்டு திருத்தேரோட்டம்
X

தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழாவின் 9ம் நாளான இன்று ராமநவமியை முன்னிட்டு, கொரோனா தொற்று குறித்த, அரசு விதிமுறைகளின் படி, கட்டுத்தேரில் பிரகார உலா வந்த சீதா இராம லட்சுமண சுவாமிகளை ஏராளமானோர் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இவ்வாண்டும் இவ்விழா கடந்த 13ம் தேதி கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்ற, இராமநவமி விழா இனிதே தொடங்கியது இருப்பினும், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, அரசின் விதிமுறைகளின் படி, சமூக இடைவெளி கடைபிடித்து, முககவசம் அணிந்த குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது, தொடர்ந்து நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலாவிற்கு மாற்றாக பிரகார உலா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவில் 9ம் நாளான இன்று இராம நவமியை முன்னிட்டு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு, விசேஷமாக கட்டமைக்கப்பட்ட கட்டுத்தேரில், தேரோட்டத்திற்கு பதிலாக, பிரகார உலாவாக, பக்தர்களுக்கு சேவை சாதித்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Updated On: 21 April 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு