Begin typing your search above and press return to search.
கல் குவாரி புதிதாக தொடங்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்
கல் குவாரி புதிதாக தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட வள்ளியம்மாள் புரம்- பாப்பாங்குளம் சாலையில் புதிதாக கல் குவாரி தொடங்க உள்ளதாக தெரிகிறது.
அங்கு குவாரி தொடங்கினால், அப்பகுதியில் சுற்றியுள்ள விவசாய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கால் நடை வளர்ப்போர் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாவார்கள். மேலும் இந்த வழியே வந்து செல்லும் பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பாதிப்பிற்குள்ளாவார்கள். எனவே இந்த பகுதியில் கல் குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என கோரி கிராமங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்