Begin typing your search above and press return to search.
சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சை மனு தாக்கல்
சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஜீவா என்பவர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
HIGHLIGHTS
தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் மர அறுவை ஆலைகள் உள்ளன.
சுமைதீர்ந்தபுரம் பகுதி மக்களில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் களம் இங்கு சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.