Begin typing your search above and press return to search.
தென்காசி: புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல்
தென்காசியில், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, டி.என்.எச்.பி. காலனியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா, போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடையை தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முத்துராஜ் அவர்கள் ஆகியோர் கண்டறிந்து, சீல் வைத்தனர்.
மேலும், தென்காசி நகரில் புகையிலைப் பொருட்கள் சம்பந்தமாக ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவரும் கடைகளை, தொடர்ந்து கண்டறிந்து சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.