Begin typing your search above and press return to search.
திருநங்கைகளுக்கு சமூகநலத்துறை சார்பில் மானியம் வழங்கல்
குத்துக்கல் வலசையில் திருநங்கைகளுக்கு சமூகநலத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம், குத்துக்கல் வலசையில் மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் மாவட்ட சமுக நலத்துறை இணைந்து நடத்திய விழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்து.
இந்நிகழ்விற்கு TNSRLM திட்ட இயக்குநர் குருநாதன் தலைமையில் நடைபெற்றது.திட்ட இயக்குநர் வெற்றிபெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் மானியமாக மூன்று திருநங்கைகளுக்கு சமூக நலத்துறை சார்பாக ரூ.50,000 வழங்கப்பட்டது.
இவ்விழாவில் Onestop centre AO ஜெயராணி மற்றும் மகளிர்திட்டம் முருகன், ஜெய்கணேஷ், வேல் டிரஸ்டி முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினை மகளிர் திட்டம் நகர்புற உதவி திட்ட அலுவலர் .சாந்தி மற்றும் ஞானரூபர்ட் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.