/* */

குற்றாலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: வியாபாரிகள் வாக்குவாதம்

குற்றாலத்தில் வாடகை பாக்கி தராத கடைகளுக்கு சீல். வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

குற்றாலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: வியாபாரிகள் வாக்குவாதம்
X

குற்றாலத்தில் வாடகை பாக்கி தராத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்று குற்றாலம். இந்த குற்றாலத்தில் குற்றாலநாதர் குழல்வாய்மொழி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு 150 வகையான கட்டிடம் மற்றும் காலி மனைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவிலுக்கு ஏராளமான வருவாய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் காலி மனைகள் இருந்து வாடகை பாக்கி மற்றும் குத்தகை பாக்கி கொடுக்கப்படவில்லை. இதனால் 5 கோடியே 88 லட்சத்துக்கும் மேல் வரி பாக்கி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாடகை பாக்கி மற்றும் குத்தகை பாக்கி கொடுக்காத கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கைகளில் இன்று காலை கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள் கோவில் ஊழியரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் ஊழியர்கள் 3 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்து விட்டுச் சென்றனர். கொரோணா காலத்தில் உள்ள வாடகை பாக்கியை மட்டும் கோயில் நிர்வாகம் தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Feb 2022 1:50 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  2. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  3. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  5. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  6. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  7. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  10. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...