/* */

தென்காசியில் அமைச்சர் வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

தென்காசியில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் அமைச்சர் வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
X

தென்காசியில் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சாலை விதிகளை மீறியதாக 16,400 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையை விட தென்காசி மாவட்டத்தில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தென்காசியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு கூறினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், சாலை பாதுகாப்பு குறித்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. கூட்டத்தில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினர்.

இதனைதொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகள் மத்தியில் பேசும்போது, தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இன்மை காரணமாக ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அரங்கேறி வருகிறது.

குறிப்பாக, விபத்துக்களை தடுக்க தமிழக அரசின் பல்வேறு சாலை பாதுகாப்பு சட்டங்களை காவல்துறையினர் முறையாக கடைபிடித்து சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுவரை தமிழகத்தில் சாலை விதிகளை மீறியதாக 16,400 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 ஆயிரம் பேர் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் குறிப்பாக சென்னையை விட தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Updated On: 24 May 2023 1:41 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு