/* */

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்.

HIGHLIGHTS

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய பதிலைக் கேட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...