தென்காசி முத்தாரம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
தென்காசி முத்தாரம்மன் ஆலயங்களில் நடைபெற்ற பங்குனி பெருந்திருவிழா. பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
HIGHLIGHTS
தென்காசி முத்தாரம்மன் ஆலயங்களில் நடைபெற்ற பங்குனி பெருந்திருவிழா. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தென்காசி அருள்மிகு மேலமுத்தாரம்மன் திருக்கோவிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் அம்பாளுக்கு அபிஷேகம் தீபாராதனை, அம்பாள் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழா மொத்தம் 16 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் திருநாளில் பூக்குழி இறங்கும் திருவிழா நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது.
மேலும் முத்தாரம்மன் திருக்கோவிலில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தபூக்குழியில் இறங்கி வழிபாடு நடத்தினர். இதேபோல் கீழ முத்தாரம்மன் திருக்கோவிலும் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கீழ முத்தாரம்மன் கோவிலில் நேற்று இரவு தொடங்கிய பூக்குழி திருவிழா இன்று காலை வரை நடைபெற்றது. இங்கு 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.