/* */

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயு: கோவையிலிருந்து சென்னைக்கு நடைபயணம்

கோவையில் துவங்கும் ஜிஎஸ்டி யாத்திரை 18 நாட்கள் நடைபயணமாகச் சென்று சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நிறைவடையும்

HIGHLIGHTS

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயு:  கோவையிலிருந்து சென்னைக்கு நடைபயணம்
X

ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 20ம் தேதி கோவையிலிருந்து சென்னைக்கு ஜிஎஸ்டி பாதயாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தெரிவித்தார்.

குற்றாலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் 5வது மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சென்னை முதல் குமரி வரை 930 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பேரணி நடத்தினோம். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அடுத்த கட்டமாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை 52 ரூபாய்க்கு கொண்டு வர வேண்டும், மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 20ம் தேதி கோவையிலிருந்து சென்னைக்கு ஜிஎஸ்டி பாதயாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்துகிறோம்.

கோவையில் துவங்கி 18 நாட்கள் பாதயாத்திரையாக சென்று சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நிறைவடையும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படும். விலைவாசி குறையும் காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு கேஸ் விற்கப்பட்ட போது விலை அதிகம் என்று போராட்டம் நடத்தினர். இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்கள் விலை உயர்வின் காரணமாக விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர். மேலும் சைக்கிள் பயன்பாட்டுக்கும் மாறி வருகின்றனர். கடந்த ஏழரை வருட மோடி ஆட்சியில் ஏழைகள் மிகவும் ஏழைகளாக மாறிவிட்டனர். பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக மாறிவிட்டனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நடைபெறும் பாதை யாத்திரைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

Updated On: 28 Feb 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது