/* */

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Sabarimala Temple Today News -திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக, இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

HIGHLIGHTS

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
X

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

ஐயப்பன் கோவீல் மண்டல கால விசேஷ பூஜைகள், 2023ம் ஆண்டு நடைதிறப்பு விவரம் வருமாறு:

Sabarimala Temple Today News -மண்டல பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.

கார்த்திகை முதல் தேதி நாளை (வியாழக்கிழமை) பிறக்கிறது. ஐயப்ப பக்தர்கள் நாளை முதல் மாலை அணிந்து, தங்களது விரதத்தை துவங்குகின்றனர்.

அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் 17-ம் தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-ம்தேதி நடை திறக்கப்பட்டு 19-ம்தேதி அடைக்கப்படும்.

அதைத்தொடர்ந்து, பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு மார்ச் 26-ம் தேதி நடை திறக்கப்படும். 27-ம் தேதி காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். ஏப்ரல் 5-ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும். சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 11-ம் தேதி நடை திறக்கப்படும். 15-ம் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து 19-ம் தேதி நடை அடைக்கப்படும்.

வைகாசி மாத பூஜைக்காக மே மாதம் 14-ம்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ம்தேதி அடைக்கப்படும். பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 29-ம் தேதி நடை திறக்கப்படும். 30-ம்தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு 20-ம் தேதி அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ம்தேதி நடை திறக்கப்பட்டு 21-ம்தேதி அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி அடைக்கப்படும்.

ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக ஆகஸ்டு 27-ம் தேதி நடை திறக்கப்பட்டு 31-ம் தேதி அடைக்கப்படும். புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டு 22-ம் தேதி அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டு 22 -ம் தேதி அடைக்கப்படும். சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி, நவம்பர் 10 -ம்தேதி நடை திறக்கப்படும். 11-ம்தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும். பின்னர் 2024-ம் ஆண்டுக்கான மண்டல சீசன் நவம்பர் 16-ம் தேதி தொடங்கி நடைபெறும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Nov 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்