/* */

நகராட்சி பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு நேப்கின்: நகர்மன்றகூட்டத்தில் கோரிக்கை

நகராட்சி எல்லைக்குள்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு நேப்கின் கிடைப்பதற்கு வழிவகை செய்ய கோரிக்கை

HIGHLIGHTS

நகராட்சி பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு நேப்கின்: நகர்மன்றகூட்டத்தில்  கோரிக்கை
X

தென்காசி நகர மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது

தென்காசி நகர மன்ற அவசர கூட்டத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி நகர மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற ஆணையாளர் பாரிஜான் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக கட்சிகளை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். நகர்மன்ற கூட்டத்தில் தமிழகத்திலேயே மூன்றாவது சிறந்த நகராட்சியாக தென்காசி நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நகர்மன்ற தலைவர் சாதிருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 33 வார்டுகளில் நடைபெற உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 33 வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் போது 20-வது வார்டு காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் செய்யது சுலைமான் என்ற ரபீக் நகர் மன்ற தலைவரிடம் நகராட்சி எல்லையை உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு நேப்கின் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் நகர மன்ற தலைவர் சாதிர் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

Updated On: 11 Sep 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்