/* */

தென்காசி காசிவிஸ்வநாதர் காேவிலில் மாசி திருவிழா தேராேட்டம் காேலாகலம்

தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி காசிவிஸ்வநாதர் காேவிலில் மாசி திருவிழா தேராேட்டம் காேலாகலம்
X

தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான காசிவிஸ்வநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா, மாசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் ஆலயத்தின் உள்ளே வைத்து குறைவான மக்களை கொண்டு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிற்கான மாசி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்று வருகிறது.

மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முதலில் சுவாமி காசி விசுவநாதர் எழுந்தருளிய தேர் கானல 9:30 மணிக்கு புறப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் சுவாமி தேர் சுற்றி வந்து நிலையை அடைந்த பிறகு உலகம்மன் எழுந்தருளிய தேர் 10.45 மணிக்கு புறப்பட்டது. திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 17 Feb 2022 1:34 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?