/* */

பாவூர்சத்திரத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பாவூர்சத்திரத்தில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

பாவூர்சத்திரத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரிகள். 

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கீழப்பாவூரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் கேசவராஜா(50) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 21 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கேசவராஜா மீது ஏற்கனவே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததற்காக இரண்டு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!