/* */

அரசு ஊழியர்கள் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்த முயற்சி !

அரசு ஊழியர்கள் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்த முயற்சி !
X

தென்காசியில் திமுகவிற்கு சாதகமாக உள்ள 90 சதவீத அரசு ஊழியர்களின் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாக தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியை அனுஷ்டா என்பவர் தபால் வாக்கிற்கான விண்ணப்பம் பெறப்படாத நிலையில், அவர் வாக்களித்ததாக சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியானதை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் புகார் அளித்ததாக கூறப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு குறித்து திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கூறுகையில், ஆசிரியை அனுஷ்டா மீது காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் புகார் அளித்ததாக வீண் வதந்திகள் வெளியாகி அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

தபால் வாக்கினை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அரசு ஊழியர்களின் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில் முறைகேட்டில் ஈடுபட முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Updated On: 31 March 2021 4:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?