Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 04.12.2021சனிக்கிழமை அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. இதை மனதில் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பொது மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசிபோட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தர ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.