/* */

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி பாஜக மனு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி பாஜக மனு
X

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பாஜகவினர்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில், கடந்த 19 மாதங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு யாரையும் அனுமதிக்காததால், அங்குள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கை ஏற்று, விரைவில் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று தென்காசி பாஜகவைச் சார்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்ரமணியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், கடையநல்லூர் நகராட்சி பகுதியில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தனியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தென்காசி தைக்கா தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு, பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On: 13 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்