Begin typing your search above and press return to search.
குற்றாலம் சாரல் திருவிழா: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான படகு போட்டி
குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான படகு போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டிய நிலையில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 12நாட்கள் நடைபெறுகிறது. தினம்தோறும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4ம் நாளான இன்று ஐந்தருவி படகு முகாமில் படகு போட்டி நடைபெற்றது. படகு போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
படகு போட்டியில் ஆண்களுக்கான நான்கு நபர்கள், இரு நபர்கள் மற்றும் பெண்களுக்கான நான்கு நபர், இரு நபர்களுக்கான படகு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு கலைவாணர் அரங்கத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.