/* */

கொரோனா ஊரடங்கு குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

கொரோனா ஊரடங்கு குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த இன்று முதல் 20-ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

அது குறித்து சுரண்டை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக சுரண்டை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனிக்கை சங்கரநாராயணன் தலைமை வகித்தார். வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவும், கொரோனாவை கட்டுப்படுத்த வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.

கூட்டத்தில் சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் ஏடி நடராஜன், துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, இணைச் செயலாளர் துரைமுருகன், செய்தி தொடர்பாளர் ராஜகுமார், ஓட்டல் சங்க செயலாளர் ஜேக்கப், பொருளாளர் அழகுசுந்தரம், விநாயகம், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள், கணேசன், வெற்றிவேல், தெய்வேந்திரன், விநியோகஸ்தர் சங்க தலைவர் சுடலை காசி, நிர்வாகிகள் மாடசாமி, பால்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசைக்கியப்பா நன்றி கூறினார்.

Updated On: 6 May 2021 1:50 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!