பழுது அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் மனு
தென்காசியில் பழுது அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனி நாடார். காங்கிரஸ் கட்சி சார்ந்த இவர் தனது தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி வருகிறார்.
அதன் அடிப்படையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கருவந்தா கிராமத்தில் இருந்து இரதயமுடையார் குளம் வரை செல்லும் தார் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அந்த சாலையை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில், கருவந்தா கிராமத்தில் இருந்து இரதமுடையார் குளம் வரை செல்லும் பழுதான தார்சாலையை புதுப்பித்து அமைக்க வேண்டும் என்றும், கருவந்தா கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் நீர் ஆதாரம் பெறுகின்ற வகையில் ஒரு புதிய கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினார். அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி, இளைஞரணி சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.