தென்காசியில் விவசாய கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர்களின் பங்கேற்பே நமது முன்னுரிமை என்கின்ற சிறப்பு முகாம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாம்கள் மேமாதம் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் இது வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை பராமரித்தல் மற்றும் மீன்வளர்த்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
விவசாய கடன் அட்டை பெற விவசாயிகள் தங்களின் நிலஆவணங்கள் (பட்டா,சிட்டா மற்றும் அடங்கல்),ஆதார் அட்டை, பான்கார்டு, குடும்பஅட்டை, அல்லது வாக்காளர் அடையாளஅட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் வங்கியின் விதிமுறைகளின்படி பரீசிலிக்கப்பட்டு கடன் வழங்கப்படும்.
விவசாயிகள் பூர்த்தி செய்தகடன் விண்ணப்பம் மற்றும் இணைய ஆவணங்களை மே-1ம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் வங்கி வணிக தொடர்பாளர்கள்,வட்டார வேளாண்மைத்துறைஅலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.