பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவில் சுமைப்பணியாளர்கள் சார்பில் AICCTU TNCSC மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் செய்தது.
HIGHLIGHTS
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவில் சுமைப்பணியாளர்கள் சார்பில் AICCTU TNCSC சார்பில் மாநிலம் தழுவிய விடுப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்,
தென்காசி மாவட்டத்தில் தென்காசி புதிய பேரூந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐசிசிடியு சார்பில் மாநிலம் தழுவிய விடுப்பு மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கடந்த 2011ம்ஆண்டு வரண்முறைபடுத்தபட்ட அனைத்து சுமைபணியாளர்கள் 3525 பேர்களுக்கு 2020 லிருந்து பச்சை அட்டை வழங்கவேண்டும்,வார விடுமுறை ஊதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், பணிபதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்
கடந்த 2019ம் ஆண்டிலிருந்து பணிபுரியும் சுமைத்தூக்குவோரை அரசு உத்திரவுபடி வரண்முறைபடுத்தி அடையாள அட்டை வழங்கவேண்டும்,
PF பிடித்தம் செய்யவேண்டும்,
சுமைபணியில் தூய்மைபணியில்அவுட்சோர்ஸ் முறையை கைவிடவேண்டும்,
வாகன ஒப்பந்ததாரர்கள் ஓவர்லோடிற்குசுமைபணியாளர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற அட்டிகூலி பேச்சுவார்த்தை மூலம் வழங்கும் முறையை தொடர நடவடிக்கை எடுத்திடவேண்டும்
மற்றும் பல கோரிக்கைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஏ ஐ சி சி டியூ மாவட்ட தலைவர் வேல் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிவில் சப்ளை சுமை பணியாளர்கள் பலர் பணிக்கு செல்லாமல் விடுப்பெடுத்து கலந்து கொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.