மது, புகையிலை, லாட்டரி சீட்டு விற்பனை செய்த 24 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மது, புகையிலை, லாட்டரி சீட்டு விற்பனை செய்த 24 பேர் கைது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, மது, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்து இருந்த 18 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 276 மது பாட்டில்களும், புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களும், மேலும் சிவகிரியில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பாலசுப்பிரமணியன் (52) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 96 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.