/* */

மது, புகையிலை, லாட்டரி சீட்டு விற்பனை செய்த 24 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மது, புகையிலை, லாட்டரி சீட்டு விற்பனை செய்த 24 பேர் கைது.

HIGHLIGHTS

மது, புகையிலை, லாட்டரி சீட்டு விற்பனை செய்த 24 பேர் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, மது, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்து இருந்த 18 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 276 மது பாட்டில்களும், புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களும், மேலும் சிவகிரியில் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பாலசுப்பிரமணியன் (52) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 96 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 2 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!