Begin typing your search above and press return to search.
மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஜ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய அமைப்பு கோட்ட தலைவர் பட்ட முத்து தலைமை தாங்கினார். மின் வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
கொரோனா தொற்றில் உயிர் இழந்த மின் வாரிய ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகையும் , வாரிசு பணியும் காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க வேண்டும். மின் மசோதா 2021- ஐ திரும்ப பெற வேண்டும். உள்ளீட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.