/* */

புளியங்குடி அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 4 பேர் கைது: ரூ.2 லட்சம் அபராதம்

இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என வனத்துறை எச்சரித்துள்ளது

HIGHLIGHTS

புளியங்குடி அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய  4 பேர்  கைது: ரூ.2 லட்சம் அபராதம்
X

தென்காசி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பன்றி வேட்டையாடியதாக  வனத்துறையினரிடம் பிடிபட்டவர்கள்

தென்காசி மாவட்டம், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பழங்களில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய நான்கு பேரை கைது செய்து அவர்களுக்கு இரண்டு லட்சம் அபராதம் விதித்து புளியங்குடி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் பழங்களில் நாட்டு வெடி குண்டு வைத்து, காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக புளியங்குடி வனதுறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் முருகன்(27), ஈஸ்வரன், கணேஷ்குமார்(22), சுரேஷ்(21) ஆகிய நான்கு பேரை கைது செய்து வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் படி, அவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் இரண்டு லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 80 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் .மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர்கள் மீது கடுமையான தண்டனையின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புளியங்குடி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்