Begin typing your search above and press return to search.
கன மழை எச்சரிக்கை: சங்கரன்கோவில் பகுதி குளங்களில் ஒன்றிய சேர்மன் ஆய்வு
நாளை தமிழத்தில் மிக கன மழை அறிவிப்பை தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள குளங்களை திமுக ஒன்றிய சேர்மன் ஆய்வு.
HIGHLIGHTS
நாளை தமிழத்தில் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள குளங்களை அதிகாரிகளுடன் திமுக ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார்.
தமிழத்தில் நாளை அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனையூர், பெரியூர், கரிவலம், மணலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்களில் தண்ணீர் அளவு, கரைகள் ஆகியவற்றை சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா உள்ளிட்ட அனைத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் திமுக ஒன்றிய சேர்மன் சங்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து எந்த நேரமும் மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.