Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்திகை நிகழ்வு
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்துகை நிகழ்வு நடத்திய தீயணைப்புத்துறையினர்.
HIGHLIGHTS
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்துகை நிகழ்வை தீயணைப்புத்துறையினர் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் சங்கரன்கோவில் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் விஜயன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் எதிர்பாராத விதமாக நடைபெறும் தீயை அச்சம் இல்லாமல் எந்த வகையான முறையை பயன்படுத்தி அணைப்பது குறித்து செய்முறை விளக்கங்களோடு ஒத்திகை நிழ்ச்சியை செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்புதுறையை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.