Begin typing your search above and press return to search.
மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு கலைக்கல்லூரி முதல்வர் வழங்கினார்
வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பினை வனச்சரகர் தலைமையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் வழங்கினார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தலையனை மற்றும் கோட்டைமலையில் உள்ள 50 மலைவாழ் குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள், பத்துவகையான காய்கறிகள் தொகுப்புகளை புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் வேலாம்மாள் வழங்கினார். இதில் வனத்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.