/* */

தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள் சேதம்

செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்த யானைகளால் தென்னை, வாழை,பலா ,மா மரங்கள் சேதம்.

HIGHLIGHTS

தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள் சேதம்
X

செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்து தென்னை, வாழை, பலா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.

செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்த யானைகளால் தென்னை, வாழை,பலா ,மா மரங்கள் சேதம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதிக்கு செல்லும் வழியில் மோட்டை அணை அருகே உள்ள சீனிமாமரத்தோட்டம் பகுதி உள்ளது. அதிகாலை தோட்டத்தித்திற்குள் புகுந்த யானைக்கூட்டம் அங்கிருந்த சுமார் 20 தென்னை மரங்களை சேதப்படுத்தியும் வேறோடு சாய்த்தும், காய்த்திருந்த மா மரத்தின் கிளைகளை ஒடித்து மாங்கனிகளை தின்றும், பலா பழங்கள் முழுவதையும் சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வாழை மரங்களையும் பிடிங்கியுள்ளது. சுமார் 4 யானைகளுக்கு மேல் இந்த தோட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இதே கால கட்டத்தில் இந்த தோட்டப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தால் பயிர்கள் மரங்கள் சேதமடைவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அணைப்பகுதியிலும் அணைப்பகுதிக்கு மேலும் பல இடங்களில் யானைகள் தண்ணீர் அருந்தும் இடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் யானைக்கூட்டங்கள் தோட்டங்களுக்குள் வருவதாக இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.

Updated On: 11 May 2022 11:17 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  4. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  5. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  6. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  7. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு