Begin typing your search above and press return to search.
கொலை குற்றவாளிகள் மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
Goondas Act In Tamil - மனைவியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.
HIGHLIGHTS
Goondas Act In Tamil - தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்தார். இவரது அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வீரசிகாமணி பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் இசக்கிமுத்து (29), சுப்பிரமணி என்பவரின் மகன் காளிராஜ் (25) மற்றும் கண்ணன் என்பவரின் மகன் அங்கு ராஜ் (23) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் விஜயகுமார் கைது செய்து சிறையில் அடைத்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2