/* */

பத்திரப்பதிவில் மோசடி: மாவட்ட பதிவாளரிடம் பெண் புகார்

தென்காசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மோசடி நடப்பதாக மாவட்ட பதிவாளரிடம் பெண் ஒருவர் இன்று புகார் அளித்தார்.

HIGHLIGHTS

பத்திரப்பதிவில் மோசடி: மாவட்ட பதிவாளரிடம் பெண் புகார்
X

புகார் அளிக்க வந்த வெள்ளையம்மாள்.

தென்காசி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவருக்கும் இவரது சகோதரருக்கும் அட்டை குளம் அருகே அறுபத்தி ஒன்பது சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை வெள்ளையம்மாளின் சகோதரர் மகன்கள் முறைகேடாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளையம்மாள் தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் இருவருக்கும் சரி பங்கு என்று நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் வெள்ளையம்மாளின் அண்ணன் மகன்கள் அரசு உத்தரவை மீறி முறைகேடாக விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதிகளாக மாற்றி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக கடையநல்லூர் சார்பதிவாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட இடங்களை விற்பனை செய்யாமல் தடுக்கும் நோக்கில் இன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளையம்மாள் புகார் அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Updated On: 23 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு