/* */

செங்கோட்டை அருகே மீண்டும் வயல்வெளியில் புகுந்த யானைகள்: விவசாயிகள் கவலை

செங்கோட்டை அருகே மீண்டும் வயல்வெளிகளில் யானைகள் புகுந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கோட்டை அருகே மீண்டும் வயல்வெளியில் புகுந்த யானைகள்: விவசாயிகள் கவலை
X

செங்கோட்டை அருகே வயல்வெளியில் உலா வரும் காட்டு யானைகள்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமத்தில் அதிகளவு நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில், நேற்று இரவு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இரண்டு யானைகள் வயல்வெளிக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்திக்கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் யானையை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது யானை அருகே உள்ள குளத்தில் உள்ள புதர்களில் சென்று மறைந்து கொண்டது.

தற்போது வரை புதர்களில் மறைந்துள்ள காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் புதர்களில் பதுங்கி கொண்ட யானைகள், தற்போது எந்தவிதமான பயமும் இல்லாமல் ஆனந்த குளியல் போட்டு கொண்டிருக்கிறது.

Updated On: 16 Sep 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  3. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  5. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  6. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  7. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  8. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...