/* */

மோட்டார்பைக் - கார் மோதி விபத்து, வியாபாரி பலி

மோட்டார்பைக் - கார் மோதி விபத்து, வியாபாரி பலி
X

கடையநல்லூர் அருகே மோட்டார் பைக்கும் காரும் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மங்களாபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் காசி என்ற சுப்பையா(40). பால் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று கடையநல்லூர் அருகே மங்களாபுரம் செல்ல கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு மோட்டார் பைக்கில் சாலையின் மேற்குப் பகுதியில் நின்ற பொழுது தென்காசியில் இருந்து வேகமாக வந்த கார், காசி என்ற சுப்பையா பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் சுப்பையாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Feb 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?