/* */

சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு..! வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்!

சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு..! வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்!
X

பட விளக்கம்: சுங்கச்சாவடி அமைய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தென்காசி 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை கைவிட வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்தும் வகையில் ரூ 412 கோடி சாலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்றது.

இந்த சாலை திருநெல்வேலி, தென்காசி இரு மாவட்டங்களை மட்டுமின்றி தமிழகம்- கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகவும் இது விளங்குகிறது.

இந்த சாலை பணியானது 3 ஆண்டுகளாக நிறைவடையாத நிலையில் மாறாந்தை பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திடலில் வணிகர் சங்கம் மற்றும் தினசரி காய்கறிகள் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுங்கச்சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்ரம ராஜா கூறுகையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளன. இப்பகுயில் விளையக்கூடிய காய்கறிகளை இங்குள்ள வியாபாரிகள் வாயிலாக அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சுங்கச்சாவடி கொண்டுவரப்பட்டால் காய்கறிகளின் விலை உயரும் என கூறினார். மேலும் இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த சுங்கச்சாவடியை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 6 Feb 2024 12:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா