Begin typing your search above and press return to search.
ஆலங்குளத்தில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகையா (வயது58). இவரது மகன் அருண் பாலா (23). இவர் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் நல்லூர் விலக்கு பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் ஒரு காரை பழுது பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் பாலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.